Monday 14 September 2015

குருவின் பணியும்!-குருவின் நோக்கமும்!

குருவின் பணியும்!-குருவின் நோக்கமும்!
துறவு மட்டுமே ஆன்மீகம் அல்ல. குருவானவர் உங்கள் பொறுப்புகளை விட்டுவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபடு என எப்பொழுதும் கூறமாட்டார். உங்கள் பொறுப்புகளை சிறப்பாக செய்ய வழிகாட்டுவார். சரியான வழிகாட்டியானவர் உங்களின் பிறப்பின் தன்மையை ஊடுருவி உங்களின் வாழ்க்கை அமைப்பிலேயே ஆன்மீகத்தை உணர்த்துவார்.

உங்கள் கர்மாவை எந்தவிதத்திலும் மாற்றாமல் அவ்வழியே உங்களை முக்திக்கு செலுத்துவது தான் குருவின் பணி. உங்கள் கர்மா அதிகரிக்கும் பொழுது தக்க சமயத்தில் காப்பாற்றி கர்மாவை வளரவிடாமல் செய்வது அவரின் பணிகளில் ஒன்று.

ஆனால் முற்றிலும் உங்கள் கர்மாவை மாற்றி செயற்கையாக வழி ஏற்படுத்தமாட்டார். இயற்கையோட இணைந்து விதையை செடியாக்கி, மரமாக்கி, பூவிட செய்து காயாக்கி கனிந்து விட செய்வதே குருவின் நோக்கம்.

No comments:

Post a Comment